விஜயின் படம்: கதை எழுதுபவர் ஒருவர், இயக்குபவர் வேறொருவர்!
Vijay and Harri in next - விஜயின் படம்: கதை எழுதுபவர் ஒருவர், இயக்குபவர் வேறொருவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் விஜயாவாகினி நிறுவனத்தின் படமொன்றில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்துக்கான கதையை மட்டும், “அழகியதமிழ்மகன்” படஇயக்குநர் பரதன் எழுதியிருக்கிறாராம். திரைக்கதை அமைத்து இயக்க வேறொருவரைத் தேடியிருக்கிறார்கள். ஒரு சில இயக்குநர்கள் இன்னொருவர் கதையைப் படமாக எடுக்கத் தயங்கியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அந்தக்கதையை இயக்குநர் ஹரி கேட்டிருக்கிறார். அவருக்குக் கதை பிடித்திருப்பதால் இந்தக்கதையை அப்படியே படமாக்கலாம் என்று சொன்னதாகவும் அதைத் தொடர்ந்து அவரையே இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு அவர் படம் இயக்கியிருப்பதால் இந்த விடயம் எளிதாக முடிந்துவிட்டதென்றும் சொல்லப்படுகிறது. ஹரி சூர்யாவை வைத்து எடுக்கும் சிங்கம்3 முடித்துவிட்டு வருவதற்கும் விஜய் அட்லி படத்தை முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி: இந்திய ஊடகம்