8,412 Views
பலாங்கொடை நகரில் தாயொருவர் தானும் அருந்து தனது பிள்ளைக்கும் விஷத்தை பருகக் கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பலாங்கொடையில் அமைந்துள்ள விகாரையொன்றின் முன் அமர்ந்து தனது தற்கொலை முயற்சி தொடர்பில் கடிதம் எழுதும் காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
தாய் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்துள்ளார். இதன்போது பிரதேசவாசிகள் தலையிட்டு தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன் போது தாயார் உயிரிழந்துள்ளார். குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.