இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ரவி மோகன் - நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் '' தனி ஒருவன் ''.
இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், 2015ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படமும் அமைந்தது.
இதன் 2ஆம் பாகமான '' தனி ஒருவன் 2 '' திரைப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதன்பிறகு இத்திரைப்படம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், திரைப்பட விருது வழங்கும் நிகழ்வொன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் "தனி ஒருவன்2" திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா இருவரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் ''தனி ஒருவன் - 2'' திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மோகன் ராஜா, இத்திரைப்படம் முதலாம் பாகத்தை விட முதலீட்டு ரீதியில் பெரிய திரைப்படம் என்பதால், அதனை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருக்கின்றோம். இத்திரைப்படத்தில், ரவி மோகன் - நயன்தாரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவிருப்பதால், அவர்களுடைய திகதிகளும் ஒன்றாக அமைய வேண்டும் '' என்று கூறியிருந்தார்.
இந்த செய்தி "தனி ஒருவன் 2" திரைப்படத்தை எதிர்பார்த்திருக்கும் இரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.