தென் கொரியாவில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
குறித்த போட்டியை நிறைவு செய்ய 3:36:67s கால அளவை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.
வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் சயுரி மெண்டிஸ், நதீஷா ராமநாயக்க, ஜயேஷி உத்தரா மற்றும் நிஷேந்த்ரா ஹர்ஷனி பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.