கனடாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயகண்ணன் கந்தசாமி என்ற 27 வயதான குறித்த இலங்கையர் கடந்த 2010ம் ஆண்டு குடும்பத்தாருடன் கனடாவுக்கு அகதியாக சென்றுள்ளார்.
எனினும் அவரது அகதி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டிருந்த போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில் தாம் நாடுகடத்தப்பட்டால், இலங்கையில் தமக்கு உயிராபத்து ஏற்படும் என்று கூறி அவரால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.