வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட அமர்வு நாளையதினம் நடைபெறவுள்ளது.
இதன்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் குறித்த விடயங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கான விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.