2,158 Views
மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசாரும் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தவிர தமிழ் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பீப் பாடல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த பாடல் தொடர்பாக சிம்புவும்,அனிரூத்தும் கோவை மற்றும் சென்னை பொலிஸ் நிலையங்களில் முன்னிலையாகுமாறு கூறப்பட்டிருந்தது. அனிரூத் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்று நாடு திரும்பினார். பின்னர் கோவை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி 2 பக்க விளக்க கடிதமொன்றை வழங்கியிருந்தார்.
பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச பீப் பாடலை வெளியிட்டதற்காக நடிகர் சிம்புவையும்,இசையமைப்பாளர் அனிரூத்தையும் உடன் கைது செய்யுமாறு உயர் நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 12 ம் திகதி இடம்பெற்றது.இதன்போது மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர். அவர்களிடம் நீதியரசரிடம் விளக்கமளித்திருந்தனர்.
பின்னர் இந்த வழக்கு 19 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் வழக்கினை விசாரித்த நீதியரசர் ராஜ்குமார், நடிகர் சிம்புவையும், இசையமைப்பாளர் அனிரூத்தையும் மார்ச் மாதம் 21 ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.