ரஜினியால் மோடிக்கு ஆபத்து- பபபபபபரபரப்பில் பா.ஜ.க வருவாரா...? வரமாட்டாரா...? எனக் குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் ரசிகர்கள். எங்கே வந்து விடுவாரோ என்று ஏங்கி ஏங்கியே தூக்கம் தொலைக்கிறார்கள் இந்திய அரசியல்வாதிகள். நிலைமை இப்படியிருக்க அவரோ, கேட்போருக்கெல்லாம் சற்றும் அசராமல் மீண்டும் மீண்டும் தன் சுட்டுவிரலால் மேல்நோக்கி சுட்டிக்கொண்டிருக்கிறார். அவர் வேறுயாருமல்ல...... நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி தான்.
அவர் எப்போதுமே இப்படித்தான், ரஜினி அரசியலுக்கு வரும்போது கண்டுகொள்ளலாம் என்று அனைவரும் அமைதியடைந்திருந்த நிலையில், "லிங்கா"இசைவெளியீட்டு விழாவில் "அரசியலுக்கு வர பயமில்லை கொஞ்சம் தயக்கம் இருக்கிறது” எனும் ரஜினியின் பேச்சின் ஒருவரி மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கின்றதாம். இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் அத்தனையும் ரஜினியின் அத்தனை நகர்வுகளையும் மீண்டும் உற்றுநோக்க ஆரம்பித்திருக்கின்றன.
இதேவேளை,மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க தமிழகத்திலும் தனது ஆட்சியை நிலைநாட்ட ரஜினியை பா.ஜ.க வில் இணைத்துக்கொள்ள முனைப்பு காட்டியிருந்தமை பற்றியும், அதற்கு பிடி கொடுக்காமல் ரஜினி நழுவியதையும் விலாவாரியாக சொல்லியிருந்தோம்.
இப்படியிருக்க, அண்மையில் பா.ஜ.க வினர் தமிழ்நாட்டின் பிரதான ஆதீனமான மதுரை சங்கரமடத்துக்கு விஜயம் செய்திருந்தனராம். அங்கு இடம்பெற்ற ஆட்சி பற்றிய கலந்துரையாடலில் போதே, ரஜினியை அரசியலுக்குள் இழுக்க விரும்பும் பா.ஜ.கவுக்கு பாரியதொரு எச்சரிக்கைச்செய்தி சங்கரமடத்தினால் கூறப்பட்டிருக்கிறதாம்.
அதாவது ரஜினியுடைய ராசி மற்றும் அவருடைய சிறப்பான ஜாதகம் காரணமாக "அவர் எந்த விடயத்தில் கால் வைத்தாலும் அதில் ஏறுமுகமாக உச்சத்துக்குத்தான் போவார். அப்படி வெற்றியின் உச்சத்துக்கு போனால் அவ்வளவு எளிதில் கீழிறங்கி வரமாட்டார். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்துவிட்டால் பிரதமர் பதவியை கூட விட்டு வைக்காமல் அதையும் வென்று விடுவார். எனவே உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்ள வேண்டாம் " என்ற காரணத்துடன் கூடிய எச்சரிக்கையே சங்கரமடத்தினால் வழங்கப்பட்டுள்ளதாம்.
இந்த செய்தியினால் பா.ஜ.க பிரதமர் நரேந்திரமோடி கூட சிறிது குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் பா.ஜ.க வில் ரஜினியை இணைத்துக்கொள்ள அடிக்கடி ரஜினியின் வீட்டை நோக்கித் தூது அனுப்பும் தமது செயற்பாட்டையும் நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றதாம்.
இவ்வாறானதொரு நிலையில் கோவா திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த ரஜினியிடம், வடஇந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு "இப்போது அரசியல்பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. No Politics" என பதிலளித்திருந்தாராம். அதாவது இந்த வேளையில் அரசியல் பேசவிரும்பவில்லை என்பதே அதன் கருத்து. அதனை தவறாக புரிந்துகொண்ட அந்தத் தொலைக்காட்சி "ரஜினி அரசியலே வேண்டாம்" என கூறினார் என்று செய்தி வெளியிட்டு எல்லோரையும் மீண்டும் ஒருமுறை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எப்படியோ, தி.மு.க வின் தலைவர் மு.கருணாநிதி உயிரோடு அரசியலில் இருக்கும்வரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரச்செய்திகள் சொல்கின்றனவாம்.
"வரும்.....ஆனா வராது....."கொமெடி தான் ஞாபகத்துக்கு வருது இதை கேட்கும்போது. (சூப்பர்ஸ்டாரும் நல்லாத்தான் கொமெடி பண்ணுகிறார்)
*கணேசமூர்த்தி ராகவன்.
#ரஜினியும் மோடியும் இணைந்து கலக்கும் 'படையப்பா' பாடல்.#Video
http://sooriyanvideos.sooriyanfm.lk/index.php?page=videos-watch&id=683