27 Views
தற்போது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு, பின்னணி தொழில்நுட்பப் பணிகள் மற்றும் VFX பணிகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் 1400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிவியல் புனைக்கதை மற்றும் ஆன்மிக சாகச அம்சங்களை இணைக்கும் வகையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளுடன் கென்யா மற்றும் அந்தாட்டிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி உலகளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.