பாடசாலை செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் என அநேகமானோர் தினமும் காலுறைகளைப் பயன்படுத்துவோராக உள்ளனர்.
இவ்வறான காலுறைகளைக் கழுவாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் வியர்வை நிறைந்த காலுறைகளை அணிந்தபடி நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பன 'Athlete's Foot' எனப்படும் பூஞ்சைத் தொற்று உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரப்பதன் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் இந்தப் பூஞ்சை வேகமாக வளர்ந்து, முதலில் கால் விரல்களின் இடுக்குகளில் வளர ஆரம்பித்து பின் உடல் முழுவதும் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பின்பற்றும் வழிமுறைகள் வருமாறு...
● ஒருமுறை பயன்படுத்திய காலுறைகளை நன்கு கழுவாமல் மீண்டும் அணியக்கூடாது.
● கால்களைத் தினமும் சவர்க்காரமிட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
● 100 வீதம் பருத்தி(Cotton) துணியாலான காலுறைகளைப் பயன்படுத்துதல்.
● ஒரே காலணியைத் தினமும் அணியாமல் மாற்றுக் காலணிகளை அணிதல்.
இந்த எளிமையான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால் Athlete's Foot பூஞ்சைத் தொற்றிலிருந்து கால்களைப் பாதுகாக்கலாம்.