41 Views
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கோதுமை மா - 1/2 கப்
அரிசி மா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு .
செய்முறை
முதலில் தேவையான அளவு பாசிப்பயருடன் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் . அதன் பின்னர் நன்றாக அவிந்த பாசிப்பயறுடன் சர்க்கரை மற்றும் வதக்கிய தேங்காயை சேர்த்து, கிளறவும்.
அதன் பின்னர் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா மற்றும் அரிசி மா, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். பின்னர் கரைத்த மாவில் பாசிப்பயறு உருண்டைகளை இட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.