ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்த பாரதிராஜாவுக்கு, இயக்குனராகும் வாய்ப்பு தான் கைகொடுத்தது. ஆனாலும் அதன் பின்னர் 1980ல் 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதிலும், படம் சுமாராகத்தான் ஓடியது. இப்படத்தின் பின் பாரதிராஜா ஹீரோவாக நடிக்கவில்லை.
தாவனிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு, போன்ற படங்களில் சிறப்பான ஒரு கதா

பாத்திரத்தில் நடித்திருந்தார்.
34 வருடங்களுக்குப் பி;ன் இப்போது மீண்டும் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'ஓம்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். தந்தை மகனின் பாசப் போராட்டத்தை கூறும் இந்த கதை பாரதிராஜாவிற்கு மிகவும் பொருந்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக இப்படத்தில் பாரதிராஜாவுடன் இசையமைப்பாளர் யுவனும் இணைக்கிறார் என்பதும், கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் இப்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தொகுப்பு
ர. பிரவீனா