தமிழ் திரையுலகின் பொற்காலமாக கருதப்படும் 1980களில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர் செந்தில் எனலாம். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்து இவர்களது நகைச்சுவைக்காக பல நாட்கள் ஓடி வெற்றிபெற்ற படங்கள் ஏராளம். இவர்களின் திகதிகளுக்காக காத்திருந்த நாயகர்களே ஏராளம் எனலாம்.
இந்நிலையில், 20 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் செந்தில், இறுதியாக இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார். அரசியல் பக்கம் தலைகாட்டி வந்தவர், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது திரைத்துறைப் பிரவேசத்தை ஆரம்பித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் இயக்கியுள்ள கள்ளப்படம் எனும், சினிமாத்துறை சம்மந்தப்பட்ட இப்படத்தில், செந்தில் நடித்துள்ளார். இவரது பாத்திரம் பற்றி இரகசியம் பேணப்படும் நிலையில், இப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-