மனித முக அதிசயம் - கத்திக்கு தப்பியது வெள்ளாட்டுக்குட்டி.தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அவரது வளர்ப்பு வெள்ளாடு போட்ட குட்டிகளில் ஒன்றின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.
தாடி வைத்து பெரிய மூக்கு கொண்ட கோபக்காரக் கிழவன் ஒருவர் கோபமாக முறைத்து பார்ப்பதைப் போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கும் அந்த வெள்ளாட்டுக்குட்டியைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறார் அந்த வெள்ளாட்டை வளர்த்தவரான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ்.
இப்படியொரு விசித்திர சம்பவம் இடம்பெற்றதைக் கேட்டால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா என்ன....? ஊர் மக்கள் மட்டுமல்லாமல் விஷயத்தை கேள்விப்படும் அத்தனை பேருமே பிலோசியஸ் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
நிலைமை இப்படியிருக்க, பிலோசியசிற்கு கவலை வேறுவிதமாக தோன்றியிருக்கிறது. இந்தக் குட்டியை வளர்த்தும் இறைச்சிக்கடைக்கு கூட கொடுக்க முடியாதே, யாரும் வாங்கவும் மாட்டார்களே என்ற கவலை தான் அது. இந்நிலையில், இந்த செய்தியை அறிந்து வந்து, அந்த வெள்ளாட்டுக்குட்டியை கண்ட ஒரு சர்க்கஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகவர், அந்த வெள்ளாட்டுக்குட்டியின் சாதாரண பெறுமதியைப் போன்று 10மடங்கு விலை தந்து அதை வாங்கிக் கொள்வதாக உத்திரவாதம் அளித்துள்ளாராம். அவரது விலை மதிப்பீட்டுக்கு பிறகு, இன்றுவரை பலர் நான்- நீ என போட்டி போட்டுக்கொண்டு, அதிக விலைக்கு அந்த வெள்ளாட்டுக்குட்டியை வாங்க தயாராகியுள்ளார்களாம்.
இதேவேளை, இவ்வாறு முகத் தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்ததற்கு காரணம் என்னவென்று ஆராச்சியில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர்கள், கருவுற்றிருந்த வேளையில் அந்த தாய் ஆட்டுக்கு "விட்டமின்-ஏ" சக்தி நிறைந்த உணவு வகைகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் இந்த முக அமைப்பு உருவாகி இருக்கலாம் என கருத்து கூறியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, முதலில் எவ்வாறு ஆட்டுக்குட்டியை விற்பது என்ற கவலையில் இருந்த அந்த ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் பிலோசியஸ் லாவ்ரெண்டிவ், தற்போது மனமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார். அதனால் "எனது அழகு ஆட்டுக்குட்டி யாருடைய சாப்பாட்டு மேஜையின் மீதும் இறைச்சியாக இருப்பதையோ, அல்லது மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாக மாறுவதையோ நான் விரும்பவில்லை" கருத்துக் கூறியுள்ளாராம்.
S.G.R%MCEPASTEBIN%