அண்மையில் இந்திய நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கிய விடயம் தமிழகத்தை சேர்ந்த 20 தமிழர்களின் கொலைச்சம்பவம் செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸ் இவர்களை சுட்டுக்கொலை செய்தமை.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு போராட்டங்களும் இடம்பெற்று வரும் சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக சிலரை கைதுசெய்துள்ளனர். செம்மரம் கடத்தல் சம்பந்தமாக சென்னையிலுள்ள சிலரையும் கைது செய்துள்ளனர்.இதில் நடிகர் சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் வட்ஸ் அப் ,பேஸ் புக் மூலமாகவும் தகவல் பரவியது இந்த விடயம் விரிவாக விசாரிக்கப்பட்ட போது வெறும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி பொலிசில் புகார் கொடுத்துள்ள சரவணன் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் எனக்கு பிடிக்காத சிலர் இந்த வதந்தியை கிளப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.