தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இருப்பதை போன்று, இலங்கையின் 19ம் திருத்தச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் சட்டவரைவை உள்ளடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இருப்பதை போன்று, இலங்கையின் 19ம் திருத்தச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் சட்டவரைவை உள்ளடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தம் சிந்தப்படாமல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் பின்னரான செயற்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றன.
மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை.
எதிர்வரும் 27ம் திகதியேனும் 19ம் திருத்தச்சட்டம் விவாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டிருக்கிறது.
எவ்வாறாயினும், இந்த அரசியல் சட்டத் திருத்தத்துடன், அடிப்படை உரிமை சட்டவரைவை உள்ளடக்குவதன் ஊடாக அனைத்து சமுகங்களின் சுயகௌரவும், சமத்துவம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த முடியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த சில காலங்களாக தாம் தூசிக்கப்பட்டு வருவதாகம், இலங்கையின் சிரேஷ்ட்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில் தமக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தமது அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளார்.
தாம் இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைத்த யோசனையை பலர் வரவேற்றிருந்த போதும், ஏனோ காரணத்துக்காக அந்த திட்டம் ஆய்வுசெய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.