இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனாவின் தூதுவர் ஈ சியங்லியாங், சீனாவின் சின்ஹ{வா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வரலாற்று காலம் தொட்டு நல்லுறவு காணப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர ஒத்துழைப்பு உறவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு எதிர்காலத்திலும் மேலோங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.