அரசாங்கத்தின் நூறுநாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், தகவல் அறியும் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.பிரதமர் ரணிவிக்ரமசிங்கவினால் இந்த சட்ட மூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் நூறுநாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், தகவல் அறியும் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
பிரதமர் ரணிவிக்ரமசிங்கவினால் இந்த சட்ட மூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது அவசர சட்ட மூலமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் தகவல் அறியும் உரிமை உறுதி செய்யப்படும்.
இதன்படி அரசாங்க நிறுவனத்தின் பொறுப்பில் உள்ள அல்லது கட்டுப்பாட்டில் உள்ள விடயங்கள் தொடர்பான தகவல்களை தங்குதடையின்றி பெற முடிவதுடன், இவ்வாறு கோரப்படும் தகவல்களை வழங்க மறுப்பதற்கான காரணங்கள் சிலவும் உள்ளடக்கப்பட்டுளு;ளன.
பொது மக்களுடன் சற்றும் தொடர்பு படாத தனியார் குறித்த தகவல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தகவல்கள் போன்ற இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன் இதன் மூலம் இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையிலான உறவிற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் வர்த்தக தொடர்புகளை பாதிக்கும் வகையிலான தகவல்களும் வழங்கப்பட மாட்டாது.
அத்துடன் தனிப்பட்டவர்களின் மருத்து அறிக்கை, பரீட்சைகள் திணைக்களத்தினால் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்ற பரீட்சைகள் சம்பந்தமான தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள் மற்றும் நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் வகையிலான தகவல்கள் எவையும் வழங்கப்படமாட்டாது.