இந்த நிலையில், கடல் நீர் மட்டம் திடீரென உயர்வதால், தமிழகத்தின் 3,209 சதுர கி.மீ. பகுதிகள் எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள், கடலில் மூழ்கிவிடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
குறித்த அறிக்கையின்படி, எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், சென்னை மாநகரில் மட்டும் 144 சதுர கி.மீ கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி விடும் என கூறப்படுகிறது.
இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்து திட்டமிட வேண்டும் என்றும், சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.