செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே பரபரப்புடன் விமர்சனங்களும் கருத்துகளும் பரவி வந்தன. இப்போது புதிய செய்தியாக இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.
செல்வராகவன் இயக்கத்தில் நம்ம சிம்பு அடுத்தபடத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்குமே தெரியும். அதை வெளியில் சொன்னவுடனேயே என்ன பிரச்சினைகள் எல்லாம் புதுசு புதுசா வரவுள்ளதோ என பலரும் பலவிதமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்தப் படம் உருவாக முன்னமே பலத்தையும் பேசுகிறார்கள். சிம்புவுக்கும் இது தவிர்க்க முடியாதது தான். ஏனெனில், இவரது கெட்டித்தனம் ஏற்கனவே நம்ம சினி உலகில் தெரிந்த விடயம் தான்.
இந்நிலையில், புது விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தில் த்ரிஷா மீண்டும் சிம்புவோடு ஜோடியாகிறார். இவரோடு இன்னொரு அழகுப் பதுமை டாப்ஷியும் நடிக்கிறார். ஜெகபதி பாபு மற்றும் இன்னும் பல முன்னணி நட்சத்திரங்களும் படத்திலுண்டு.
இசைக்கு யுவனைப் பிடித்திருக்கிறார்கள். பார்க்கலாம் இந்தப் படம் இன்னும் எவ்வளவுக்கு அடிபடவுள்ளது என்று !
-கோடம்பாக்கக் குருவி-