2010ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் போட்டி முடிவுகளை ஆரூடம் சொன்ன போல் என்ற பெயருடைய ஒக்டோபஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
2008 ஐரோப்பிய கிண்ணம்,
2010 உலகக்கிண்ணம் ஆகியவற்றின் முடிவுகளை மிகத் துல்லியமாக (கணித்த முடிவுகளில் இரண்டே தவறு ; 12 சரி) ஆரூடம் சொல்லியது போல்.
ஜெர்மனி விளையாடும் போட்டிகளில் இதன் ஆரூடங்கள் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டன.
எனினும் 2010இன் இறுதிப் பகுதியில் இந்த போல் இறந்துபோனது.
இம்முறை போலின் வெற்றிடத்தை நிரப்ப சீனாவில் பன்டாக் குட்டிகளும், ஜேர்மனியில் நெல்லி என்ற யானையும் இருப்பதாகச் சொல்லப்பட்டன.
எனினும் மத்தியகிழக்கில் இருந்து ஷாஹீன் என்ற புத்திசாலி ஒட்டகம் புறப்பட்டுள்ளது என டுபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாஹீன் இதுவரை கணித்த முடிவுகளில் எல்லாமே சரியாக நடந்துள்ளன.
அதிலும் யாரும் எதிர்பாராத
ஸ்பெய்னின் தோல்வி பற்றியும் ஷாஹீன் எதிர்வு கூறியுள்ளது.
இப்போது சுவாரஸ்யம் என்னவென்றால் இன்று இரவு இடம்பெறும் ஜேர்மனி - போர்த்துக்கல் ஆட்டத்தில் எல்லோரும் எதிர்பார்த்துள்ள ஜேர்மனி தோற்கும் என்றும் போர்த்துக்கல் வெல்லும் என்று ஷாஹீன் சொல்லி இருப்பது தான்.
(சூரியனில் தினமும் காலை 8.30க்கும் இரவு 7.30க்கும்
உலகக்கிண்ண நாளேட்டில் தினசரி உலகக்கிண்ண போட்டி முடிவுகளையும் புதிய செய்திகளையும் கேட்டறியுங்கள்)
இன்றிரவு இப்படி நடந்தால் அது இந்த உலகக்கிண்ணத்தின் மற்றொரு அதிர்ச்சியாக அமையும்.
அப்படி நடக்காவிடின் ஒட்டகத்தின் குட்டு உடைந்துபோகும்.
எது நடக்கும்?