பாண் உள்ளிட்ட சகல பொருட்களின் நிறைகளை, நுகர்வோருக்கு தேவையெனில் இன்று முதல் மீள் சோதனைக்கு உட்படுத்த முடியும்.
இதன்பொருட்டு விற்பனை நிலையங்களில் தராசுகள் வைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் சரியாக இயங்கும் தராசுகள் இதற்கு வைக்கப்படவேண்டுமென அச்சபை தெரிவித்துள்ளது.