ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
President meets ex president - ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையேயான சந்திப்பு இன்று மாலை 1.30 அளவில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலிருந்து சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மற்றும் எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் குமார வெல்கம, பந்துல குணவர்த்தன மற்றும் டளஸ் அலகப்பெரும ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், எட்டப்படவுள்ள இணக்கப்பாடு தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்தை நேற்று ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கடையே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், திட்டமிடப்படாத காரணத்தால் அந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.