போரின் சாட்சியாக இருந்த சிறுமி,பட்டினியால் பலி...
Sooriyan Gossip - போரின் சாட்சியாக இருந்த சிறுமி,பட்டினியால் பலி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஏமன் அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே, கடந்த 2015 முதல் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் சுமார் 10 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்ல் அமல் ஹூஷேன் என்ற சிறுமியின் புகைப்படம் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த மாதம் வெளியாகி உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குழந்தையின் புகைப்படத்தில் சிறுமி,எலும்பும் தோலுமாக இருப்பது உலத்தின் கவனிப்பை ஏமன் பக்கம் திருப்பியது.
பசியாலும், பட்டியாலும் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருந்த அவர் ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரின் சாட்சியாக இருந்தார்.
இந்த நிலையில், குறித்த சிறுமி திடீரென உடல் நலக் குறைவால் மரணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.