நெதர்லாந்து - யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி துறையினர் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள்.
குறித்த பல்கலைக்கழக விண்வெளி துறையினர் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் செயலிழந்த எரிமலைகளை செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்தார்கள். குறித்த எரிமலைகளின் அடிப்பகுதியில் சுமார் 4,500m ஆழத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடையங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
பூமியை போலவே நீர் நிரம்பியிருந்த செவ்வாய் கிரகம், காலநிலை மாற்றத்தால், மேற்பரப்பு கொண்டிருந்த நீரை முற்றிலுமாக இழந்தது என, ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நெதர்லாந்து - யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி துறையினர் மேற்கொண்ட புதிய ஆய்வில், செவ்வாயின் அடிப்பரப்பில் நீர் உள்ளது என்றும், நீரில் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட ஆய்வில், பனி கிரகத்தின் தென் துருவத்திற்கு கீழே நீர் நிரம்பிய குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே, செவ்வாயில் நீர் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இதன் அடிப்படையில் செவ்வாயில் உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பது தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறன