கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது டிரம்ப்பின் உதவியாளராகவும் செயற்பட்ட போல் மனபோர்ட்க்கு ( Paul Manafort ) 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டார்கள். அடுத்த அமெரிக்க அதிபர் ஹிலாரி கிளிண்டன்தான் என்ற உயர்ந்த பட்ச எதிர்பார்ப்பில் உலக நாடுகள் இருக்க, முடிவு டிரம்ப் பக்கம் வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில், டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷியா உதவியது என்ற பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்ள சிறப்பு கவுன்சில் விசாரணை குழு, ரொபர்ட் முல்லர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளது. நடைபெற்ற தேர்தலில் டிரம்ப்பின் பிரசார குழுவில் இருந்த 6 ஆலோசகர்களில் போல் மனபோர்ட் டும் உள்ளடங்குகின்றார். குறித்த அதிகாரி டிரம்பின் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 47 மாதங்கள் போல் மனபோர்ட்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக உக்ரைன் அரசியல்வாதிகளிடம் இருந்து 55 மில்லியன் டொலர் பணத்தை பெற்று வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதை, போல் மனபோர்ட்க்கு மறுத்திருந்தார். அத்துடன் உக்ரைன் அரசியல்வாதிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றியதாகவும், தனக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்றும் மறுத்தார். இந்தநிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இவர் மீது வொஷிங்டன் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக உள்ளது.
மேலும் போல் மனபோர்ட் தொடர்பான வழக்கில் இவருடன் தேர்தல் பணியாற்றிய ரிக்கேட்ஸ் மற்றும் 4 உதவியாளர்களும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.