பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி என்ற நாயை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரித்திருந்தார்.
கடந்த வருடத்தில் இறுதியில் வந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நல்ல கதை கொண்ட சிறிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். அவர்களுடன் கருப்பி என்ற நாயும் படத்தில் முக்கிய அங்கம் வகித்தது. பொதுவாக படம் வெற்றி பெற்றால் கதாநாயகி , கதாநாயகர்களுக்குதான் அடுத்தடுத்து அதிஷ்ட வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் கருப்பிக்கும் ஓர் அதிஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதுமுகங்கள் உருவாக்கும் ஆத்தா என்ற படத்தில் கருப்பி தான் முக்கிய கதாபாத்திரமாம். சத்யராஜ், சரண்யா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.