சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சமந்தா. இவருடைய அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. ஆனாலும் சமந்தா சரளமாக தமிழ் பேசும் தமிழ் நடிகையாகவே ரசிகர்களோடு ஒன்றித்துப்போய் இருக்கிறார்.ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் B .com படித்த இவர், அப்போதே தனது செலவுகளுக்காக மாடலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
1940-களில் ஹொலிவூட் இல் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தான் சமந்தாவின் ரோல் மாடல். தமிழில் ரேவதி நடித்த படங்களும் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் . கண்ணாடி முன்பாக நின்று நடித்துப் பழகும்போது பேசுகிற வசனங்கள், இவர்கள் இருவரது வசனங்களாகத்தான் இருக்கும் என்று சமந்தா கூறி இருக்கிறார், சமந்தா.
ஆனால் இப்பொழுது இவருடைய வசனங்களை மற்றவர்கள் பேசி பழகும் படி வளர்த்து நிற்கிறார் சமந்தா . இவருடைய வருமானமும் அப்படித்தான். இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். சமந்தாவுக்கு சம்பளத்தை போல சந்தோஷமும் அதிகமாகிட்டே இருக்க எங்களது வாழ்த்துக்கள்.