கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இளவரசர் ஹரி மேகன் மார்க்லே தம்பதியினர் தங்களது முதலாவது குழந்தையை எதிப்பார்த்துள்ளனர். இந்த செய்தியை உலகுக்கு சொல்வற்க்காக கடந்த செவ்வாய்க்கிழமை தங்களுக்கான உத்தியோக பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்தனர்.
இந்த தம்பதியருக்கு உலகம் முழுவதும் ஏராள ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களில் 1 மில்லியன் ரசிகர்கள் இவர்களை தொடர ஆரம்பித்தனர்.
“”sussexroyal”” என்ற இந்த அரசவை தம்பதியரின் இன்ஸ்டாகிராம் கணக்கு படைத்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகம் இச்சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த ஒரு வாரத்தில் இந்த கணக்கை 4.4 மில்லியன் மக்கள் தொடக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் கணக்கைத் ஆரம்பித்தது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடத்தான் என இந்தத் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.