அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து தமிழ்வாணன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ''உயர்ந்த மனிதன்'' படம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் அமிதாப்பச்சனுக்கு முதல் தமிழ் திரைப்படம் என்பதால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார். ‘‘உயர்ந்த மனிதன் பட விவகாரத்தில் அமிதாப்பச்சனுக்கும், தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே சிறிய பிரச்சினை நிலவுகிறது. அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவோம். விரைவில் மும்பை சென்று அமிதாப்பச்சனை சந்தித்து கலந்தாலோசித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நானும் தமிழ்வாணனும் ஏற்கனவே சில சிக்கல்களை தீர்த்து விட்டுத்தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளோம்'’ என, எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார்.