நேற்று இலங்கை அணி காலி மைதானத்தில் பெற்ற அபாரமான டெஸ்ட் வெற்றி இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் உற்சாகத்தை வழங்கி இருக்கிறது.
இங்கிலாந்தில் வைத்துப் பெற்ற தொடர் வெற்றியின் பின்னர் அஞ்செலொ மத்தியூசின் தலைமையில் இலங்கை அணி புது உற்சாகத்தோடு புறப்பட்டுள்ளது என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அடைந்த காலி டெஸ்ட் போட்டியின் தோல்வியும், கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை போனதும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் சோர்வையும் வழங்கியிருந்தது உண்மை.
நேற்று மழையையும் முந்தி பாகிஸ்தானை வீழ்த்தியது மீண்டும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் இலங்கையின் குமார் சங்கக்கார துடுப்பாட்டத் தரவரிசையில் முதலாமிடம், அணித் தலைவர் 5ஆம் இடம் என்று இலங்கை ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி.
எனினும் இந்தத் தரப்படுத்தல் காலி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முன்னதாகக் கணிக்கப்பட்டது.
இதெயெல்லாம் விட அண்மைக்காலமாகவே எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் இந்திய - இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தியா 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்திடம் தொற்றிருப்பதும் இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க, இந்திய ரசிகர்களுக்கு மிகப் பெரும் சோகத்தைப் பரிசளித்துள்ளது.
இன்னொரு சந்தோசம் இலங்கை ரசிகர்களுக்குக் காத்துள்ளது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியாவை அணிகளுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் பின் தள்ளும் வாய்ப்பு..
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லாமல், இலங்கை பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் தோற்காமல் இருந்தால் இலங்கை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் பின் தள்ளி டெஸ்ட் தரப்படுத்தல்களில் 4ஆம் இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
(படத்தைப் பார்க்கவும்)
முற்கூட்டிய வாழ்த்துக்களை சொல்லிவைப்போம்.