சிம்பு
சிம்பு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. கொடுத்த டேட்ஸில் படப்பிடிப்புக்கு வராததால் சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிம்புவை வைத்தே மாநாடு படத்தை எடுக்க உள்ளனர். சிம்பு வம்பு எதுவும் செய்யாமல் நடித்துக் கொடுப்பார் என்று அவரின் அம்மா உஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
ராதாரவி
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார். அவ் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நயன்தாரா
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு என் கெரியரிலேயே நான் செய்த மிகப் பெரிய தவறு கஜினி படத்தில் நடித்தது தான் என்றார் நயன்தாரா. கஜினி படத்தை இயக்கியதும் இதே முருகதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பள பாக்கி என்று கூறி தர்பார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கிற்கும் நயன்தாரா வரவில்லை. இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
கவின்
பிக் பாஸ் இன் இந்த ஆண்டு நடந்த மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பிக் பாஸால் கவினுக்கு இப்படி ஒரு புது வாழ்க்கை கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, ஏன் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பாக்யராஜ்
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கருத்துகளை பதிவு செய் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது, அந்த பெண்களும் தான் காரணம் என்றார். அவரின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.