அவுஸ்ரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீ கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இப்போதுவரை எரிந்து வருகிறது.வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த காட்டு தீயால் 50 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன. நீரின் அளவும் அந்த நாட்டில் குறைந்துள்ளது. அதிக நீரை குடிக்கும் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் அவற்றை கொல்ல முடிவு செய்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.