7,608 Views
இதில் 3 பேர் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் , மற்றைய ஒருவர் இங்கிலாந்தில் வசித்துவரும் இலங்கையர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தாஜூடீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மூவர் இத்தாலிக்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அம் மூன்று பேர் தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும் , இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் சந்தேகநபர் இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முன்னாள் தூதரக அதிகாரியொருவர் உதவிசெய்துள்ளதாகவும் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.