கத்தி படம் வெளிவருமா வெளிவராதா என விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி விஜய்யையும் ரசிகர்களையும் கலாய்ப்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்க, இன்னொரு பக்கம் கத்தி திரைப்பட முன்பதிவுகளை மேற்கொண்டு வந்த சென்னை சத்யம் திரையரங்கு மர்ம நபர்களால் நேற்றிரவு
குண்டுவீசி தாக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்து ட்விட்டரில் ராதிகா, குஷ்பு, மதன் கார்க்கி போன்றோரும் இன்னும் பலரும் தகவல் பகிர்ந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவரான சரத்குமாரிடம் இது பற்றி விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
கத்தி வரும், வரணும் என்று ஆரம்பத்தில் பதில் சொன்ன சரத்குமாரை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சீண்ட, சூடான நாட்டாமை பொங்கி வெடித்துவிட்டார்.
நடிகர் சங்கத்தலைவர் என்ற ரீதியில் இவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொருமிய சில விஜய் ரசிகர்கள் 'நீங்க நடிகர் சங்கத் தலைவர் தானா?' என்று கேட்டபோது,
'நேரில் வா காட்டுகிறேன்' என்றும் தலையை வெட்டுவேன் என்று மிரட்டிய ரசிகருக்கு தனது வீட்டு முகவரியைக் கொடுத்து 'முடிந்தால் வந்து தலையை எடு' என்றும் சரத் பொங்கி வெடித்திருந்தார்.

இறுதியாக சிரிப்புடன், Good Night சொல்லி விடைபெற்றார் சரத்குமார்.
இன்னும் இணைய மோதல்கள் வெடிக்குமா?
சுவாரஸ்யம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் வெயிட்டிங்.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.
-சினி CID