பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, Chocolate, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.
தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து, பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.
ஆவாரம் பூ, தோல் வறட்சி,வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு என 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம்.
தேங்காய்ப் பால் சிறிதளவு எடுத்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்து,பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும்.தோல் நல்ல வனப்புடன் இருக்க காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
பழ வகையைச் சேர்ந்த தக்காளி சமையலில் நிச்சயம் இடம் பெறும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தக்காளியில் உள்ள Antioxidant சிறந்த ஆதாரமாகும். தக்காளியில் Vitamin A மற்றும் Vitamin C ஆகியவை நிறைந்துள்ளன.
எனவே மேற்கொண்ட விடயங்களைப் பின்பற்றி சருமத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.