பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,லட்சுமி மேனன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப்பின்பு'கும்கி 2’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது.
இந்தநிலையில், இத் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை Highcourt இல் சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கும்கி 2 திரைப்படத்தை தயாரிக்க பிரபு சாலமன் 2018 ஆம் ஆண்டு 1.50 கோடி இந்திய ரூபாய் கடன் பெற்றார். கும்கி 2 திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு வட்டியுடன் கடன் தொகையை திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், அந்த தொகையை திருப்பி தராமல் திரைப்படத்தை வெளியிடபோவதாக வழக்கு தொடுத்திருந்த நிலையில்
கும்கி 2 திரைப்படத்தை வருகிற December 3 ஆம் திகதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.