தற்போதைய காலத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய பாரிய பிரச்சினைதான் முதுகுவலி.
வேலை நேரங்களிலும் சரி, வீட்டில் இருக்கும்போதும் சரி அடிக்கடி ஏற்படும் இந்த முதுகுவலிக்கு அடிப்படைக் காரணங்களாகப் பின்வருவன அமைகின்றன...
●தவறான உடல் நிலையில் வேலை செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
●அடிமுதுகுத் தண்டுவடம் தேய்வடைதல்.
●வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய நரம்புப் பிரச்சினைகள்.
●அதிகபடியான மன அழுத்தத்தால் உடலில் உள்ள தசைகள் இறுக்கமடைதல்.
இவ்வாறான அசௌகரியங்களிற்கு மத்தியிலும் இந்த முதுகுவலியைப் போக்கக்கூடிய சிறந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்...
01. நீண்ட நேர வேலைக்குப் பிறகு கட்டாயமாக ஓய்வெடுத்தல் அவசியம்.
02. அமரும்போதும், நிற்கும்போதும் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும்.
03. வலி ஏற்படும் இடத்தில் வெப்பம் அல்லது குளிர் ஒத்தடம் கொடுத்தல்.
04. உடல் எடையை சீராகப் பேணுதல்.
05. வீட்டிலேயே இலகுவான உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்தல்.
இதன் பின்பும் முதுகுவலி நீடிக்குமாயின் உடனடியாக மருத்துவரை நாடி ஆலோசனை பெறுதல் நல்லது.