யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான இந்திய வீட்டமைப்பு திட்டம் நிறைவடையும் நிலையை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான வேலைத்திட்டத்தை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதன் கீழ் கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதி வரையில், 43 ஆயிரத்து 800 வீடுகளின் நிர்மாண மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த வருடத்தில் மாத்திரம் வடமாகாணத்தில் 13 ஆயிரத்து 827 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 51 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 502 வீடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 2 ஆயிரத்து 200 வீடுகள் மாத்திரமே இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் இந்த வேலைத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.