37 Views
தேவையான அளவு கொதிக்கவைக்காத பச்சைப் பாலில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து, பஞ்சு கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான துணியில் துடைக்க வேண்டும்.
இதனால் இறந்த சரும செல்களை மெதுவாக நீக்குகிறது. மஞ்சள் கிருமித்தொற்றைத் தடுத்து முகத்திற்குத் தனிப் பொலிவைத் தருவதற்கு உதவுகிறது.
நன்கு கனிந்த பப்பாளி அல்லது வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூச வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால், வாழைப்பழத்தில் உள்ள Vitamin A மற்றும் C சருமத்தின் வறட்சியால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும். முகத்திற்கு பொலிவையும் தரக்கூடியது.