1,635 Views
போட்டி நிர்ணயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்கவே முன்னிலையாகினார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னர், ரங்கன ஹெரத் மற்றும் குசல் ஜனித் இருவருமே, விசாரணைக்காக முன்னிலையாகினார்கள்.
இந்நிலையில் இன்று முன்னிலையான அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
"குசல், ஹேரத் ஆகியோருக்கு போட்டி நிர்ணயம் மேற்கொள்வதற்கான முனைப்பு வழங்கப்பட்ட விபரங்கள் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைக் கேட்டார்கள். அவ்விருவரோடும் சூதாட்ட முகவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் பேசியவிடயங்கள் குறித்து அணித் தலைவரான எனக்கு அவர்கள் சொல்லிய விடயங்களை ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் நான் முறையிடச் சொன்னது பற்றி விளக்கம் கொடுத்துள்ளேன்.
இதற்கு மாறாக சில தனி நபர்களும், சில ஊடகங்களும் தெரிவித்த பொய்யான, ஆதாரமற்ற கருத்துக்கள் என்னையும், அணி வீரர்களையும் மன வருத்தமடையச் செய்துள்ளன" எனக் குறிப்பிட்டார் அவர்.
மெத்யூஸ் இன்று 3 மணி நேரம் வாக்குமூலமாக வழங்கி இருந்தார்.