IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...
ஸ்ரீனிவாசன் பதவி அகற்றப்பட்டார்..
இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
மேலும், சுனில் கவாஸ்கர் இந்தியக் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராகவும், (IPL காலத்தில் இவரது கடமைகள் இருக்கும்)
இந்தியக் கிரிக்கெட் சபையின் 5 உப தலைவர்களில் ஒருவரான ஷிவ்லால் யாதவ் தலைவருக்கான கடமைகளைப் பார்த்துக்கொள்வார் எனவும் அறிவித்துள்ளது.
எனினும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இம்முறை IPL இல் விளையாடுவதைத் தடைசெய்யப் போவதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பதவியேற்க எண்ணியிருந்த ஸ்ரீனிவாசனின் எண்ணம் தடைப்பட்டுள்ளது.
ஸ்ரீசாந்தின் கைதோடு ஆரம்பித்த பந்தய, சூதாட்ட விவகாரம், ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனின் கைது, இதர சர்ச்சைகள் என்று நீடித்துக்கொண்டே செல்கிறது.
எனினும், இவ்வருடத்தின் IPL ஏற்கெனவே அறிவித்தது போல ஏப்ரல் 16ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ஆரம்பமாகும்.