424 Views
பொலிவுட்டில் பிரகாசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திரம் ஜெக்குலின் பெர்ணாண்டாஸ்.
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சல்மான் கானுடன் இலங்கைக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார் ஜெக்குலின்.
சல்மானுடன் நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்த ஜெக்குலின், (ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூட சல்மானுடன் ஜெக்குலின் இலங்கை வந்து கலக்கியதும், பின்னர் கலாய்க்கப்பட்டதும் ஞாபகம் தானே?) தற்போது புதிய நபரொருவடன் சுற்றித் திரிவதாக பொலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
அவர் வேறு யாரும் அல்ல, புகழ்பெற்ற இந்திப் பட இயக்குனர் கரண் ஜோஹார்.
ஆம் , ஜெக்குலினுடைய புதிய (ஊர் சுற்றும்) துணை கரன் ஜோஹார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பல பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றனர்.
ஏற்கனவே தன்னோடு நடிக்கும் நாயகர்கள், இயக்குனர்களுடன் சிறப்பான தொடர்பை பேணுவதில் ஜெக்குலின் கைதேர்ந்தவர் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கரண் ஜோஹாருடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்துள்ளார் அவர்.