சவால்கள் சர்ச்சைகள் உக்கிரதாண்டவம் ஆடும் அதி தீவிர ரசிகர்களின் சூடான பேசுக்கள் இப்படி இந்திய அணியினரை போட்டு வாட்ட..அரையிறுதி ஆட்டத்தில் தோற்ற சோகத்தோடு இரவோடு இரவாக நாடு திரும்பிய இந்திய அணியினருக்கு தோனி நீங்களே இந்திய அணியின் உயற்சிக்கு ஏணி..பிடியுங்க இந்த 1000 ரூபாவை..

இப்படி சொல்லி ஒரு காசோலையை தோனிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் உத்தர பிரதேச போலீஸ் உயர் அதிகாரி அமிதாப் தாகூர் .அவ் அதிகாரி இக் காசோலையோடு ஓர் கடிதத்தையும் இணைத்து தோனிக்கு அனுப்பி வைத்துள்ளார் .அதில் அவர் கூறிய கருத்துக்கள் சற்று வேடிக்கையாக இருப்பதோடு தீவிர இந்திய ரசிகர்களை கோபப்படுதுவதாகவும் அமைந்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது
தோனி அவர்களே களத்தில் இந்திய அணி துடுப்பெடுத்து ஆடுகையில் நாட்டில் விடுப்பெடுத்து நாட்டின் வளர்ச்சியினையும் பொருட்படுத்தாது கடுப்பேத்தும் குடிமக்களை பார்க்கையில் சற்று கவலையாக இருக்குறது இந்நிலைமை தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி அதலபாதளத்திற்கு சென்றுவிடும் ...எனவே கிரிக்கெட் போதைக்குள் சிக்கி தவிக்கும் இந்திய ரசிகர்கர்கள் தம் அலுவலகங்களில் விடுப்பெடுத்து ஆட்டங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டிய சமூக பொறுப்பு உங்களுடையது எனக்கூறி 1000 ரூபா பெறுமதியான காசோலையினையும் அனுப்பி வைத்துள்ளார் இவ்வதிகாரி
(போலீசுகாரு போலீசுகாரு என்ன கொடும சார் ..வாழைப்பழத்தில ஊசி எத்துற மாதிரி இப்பிடி எல்லாம் உண்மைய சொல்லுறீங்கள் ....)