தமிழகம் நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்னால் இரு சிறுமிகள் உள்ளிட்ட நால்வர் தீக் குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியாளரிடம் முறையிட வருகை தந்திருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் அலட்சியமாக செயற்பட்டதாகவும், காவல் துறையில் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும், தீக்குளிக்க முயற்சித்தவர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு முறைகள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் தீக்குளித்துள்ளனர்.
தீக்குளித்தவர்கள் உடல் கருகிய நிலையில் திருநெல்வேலி அரச மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் நிலை குறித்து இதுவரை வைத்தியசாலை அறிவிக்காமையினால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவிவருவதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமிகள் இருவர் மற்றும் தாய் தந்தை என ஒரே குடும்த்தை சேர்ந்தவர்களே இவ்வாறு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.
தற்போது அவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
