19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்புகள் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியினால் சட்டமூலம் தொடர்பான விவாதம் முற்பகல் 9.30 அளவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.
சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவாக வாக்களிக்க தீரமானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியும் 19 வது திருத்தத்திற்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.