10,105 Views
நடிகை த்ரிஷாவும், தொழில் அதிபரும்… பட அதிபருமான வருண்மணியனும் காதலித்ததும்…. கடந்த ஜனவரி மாதத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும்… அரதப்பழசான செய்தி.
த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் திருமணத்துக்கு முன்பே விவாகரத்து பெற்றதுபோல் பிரிந்ததுதான் லேட்டஸ்ட் செய்தி! கடைசியாக கிடைத்த தகவலின்படி நிச்சயதார்த்தத்தின்போது வருண்மணியன் போட்ட வைர மோதிரத்தைக் கழற்றிவிட்டாராம் த்ரிஷா.
அது மட்டுமல்ல, அப்போது த்ரிஷாவுக்கு வருண்மணியன் பரிசளித்த பல லட்சம் மதிப்புள்ள வேறுசில பொருட்களையும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தகவல்! இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க…. உயிருக்குயிராக காதலித்த த்ரிஷா – வருண்மணியன் காதலில் கல்லைப் போட்டது யார் என்ற கேள்விதான் திரைத்துறையில் சுற்றிசுழன்றடிக்கிறது.
அதானே… அந்தப் ‘புண்ணியத்தை’ செய்த புண்ணியவான் யாராம்? விசாரித்தால்…. சிம்பு பக்கம் சந்தேகவிரலைத் திருப்புகிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா. ஏற்கனவே அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் சிம்பு உடன் நடித்திருக்கிறார் த்ரிஷா.
இருவருக்கும் நீண்டகாலமாகவே ‘ரகசிய கெமிஸ்ட்ரி’ இருந்து வருகிறது. இதெல்லாம் தெரிந்ததாலோ என்னவோ, தற்போது சிம்பு உடன் த்ரிஷா நடிப்பது வருண்மணியனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்று வருண்மணியன் த்ரிஷாவிடம் சொன்னதாகவும், அவரது பேச்சை மீறி சிம்புவுடன் நடிக்க த்ரிஷா ஆர்வம் காட்டியதோடு அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.
இந்த சம்பவம் தவிர ‘வேறு சில’ சம்பவங்களும் வருண்மணியனை மனம் மாற வைத்ததாகச் சொல்கிறார்கள். வருண்மணியனின் மாற்றம் பற்றி சிம்புவிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கிறார் த்ரிஷா. அப்போது சாத்தான் வேதம் ஓதியதாகவும் கேள்வி.
தமிழ்சினிமா கதையைவிட நடிகைகளின் கதைகளில் ஏகப்பட்ட ட்விஸ்ட்!
=== CASTRO RAHUL ===