Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முன்பு ஹிட் ஆன பழைய திரைப்படங்களை இன்றைய புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அதாவது, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடுவது சமீபகால டிரென்ட்!

சிவாஜி கணேசன் நடித்த ’கர்ணன்’, ‘வசந்தமாளிகை’, எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ஏன் கமல் - ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற பல படங்கள் இப்படி சமீபத்தில் வெளியாகின!

இந்த வரிசையில் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் அஜித் முந்திக்கொள்கிறார்.
ஆம்! அஜித் - ஷாலினி ஜோடியாக நடித்து, சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படமும் டிஜிட்டல் மயமாகிறது!

அஜித்தின் 25-ஆவது படமாக அமைந்த இப்படம் 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!



அத்துடன் அஜித் - ஷாலினியின் காதல், திருமணம் போன்ற முக்கிய வாழ்க்கைத் திருப்பங்களும் இந்தப் படம் மூலமாகவே நிகழ்ந்தவை என்பதும் சிறப்பானது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ’அமர்க்களம்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்!
அதாவது, ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக ‘அமர்க்களம்’ படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது.
2,592 Views
உயரத்தில் இருக்கிற உங்கள் சூரியனின் உயரத்தைத் தொட எல்லாருக்குமே அதீத ஆசை..

ஆனால் ஆசை இருக்கிற எல்லோருக்கும் அடைய முடிவதில்லையே.

அடைந்தவரும் நிரந்தரமாக அனுபவிப்பதில்லை. ஆனாலும் உயரங்களைக் கீழே இருந்து பார்க்கும் பலருக்கு அடைவது மட்டுமன்றி, அந்த உயரத்தையே தங்கள் சாதனை சாகசத்துக்கு மாற்றுவதில் ஒரு சந்தோசம்..

இதுவும் ஒரு சாதனை சாகசம் தான். 2013.04.03 அன்று முப்பத்து ஏழு மாடிகளைக் கொண்ட இலங்கையின் முதலாவது உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தில் தான் இந்த அரிய சாகசம் நடந்தேறி இருக்கிறது!!!

கொழும்பு வாழ் மக்களுக்கு புதியதோர் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கி இருக்கிறார்கள் அமெரிக்க பிரஜை. கிறிஸ்டன் ஈவன் மற்றும் கனடா பிரஜையான கரட் பெரீ.
பேஸ் ஜம்ப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளைக் கண்ட இவர்கள் இருவரும் முதன் முதலாக இலங்கை மண்ணில் பேஸ் ஜம்ப் போட்டிகளுக்கான ஒரு முன்னோட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்.



அதற்காக இருவரும் உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது மாடிக்கே சென்று அங்கிருந்து தரையை நோக்கி குபீர் என்று விழுந்திருக்கிறார்கள்.

சூரியன் எப் . எம் இன் 35 ஆவது மாடியை கடக்கின்ற பொழுது அவர்களுடைய பரசூட் விரிந்து கொண்டது.
நல்லவர்கள் குடிகொண்ட இடமல்லவா? அதுதான்.!!!!



நல்லவேளை உலக வர்த்தக மையத்தினை 37 மாடிகளோடு நிறுத்தி விட்டார்கள்.....
கீழே இருந்து விபரம் அறியாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் வாய் பிளந்து நின்றார்கள்.

அடுத்தமுறை சொல்லிட்டு செய்யுங்கப்பா.
பார்க்காத பலரும் பார்ப்பாங்கல்ல..
1,268 Views
இயக்குனர் விஜய் + அமலா பால் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதுவும் திகதியும் நிச்சயிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் ​ஜூன்​ 12. தெய்வத்திருமகள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜ​ய்க்கு ​ தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனர் எனும் இடம் இருக்கிறது. அந்தத் திரைப்படத்திலேயே அனுஷ்காவோடு இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்து இருவருக்குமான நட்பை நெருக்கப்படுத்தியுள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது.

இதுவரை அமலாவும் விஜயும் தமது காதலை வெளிப்படையாக மறுத்து வந்திருந்தாலும், விஜய் ​(இயக்குனருங்கோ) ​தன்னுடைய அடுத்த படமான தலைவா படத்திலும் அமலாவை நடிக்க வைத்தபோது கோடம்பாக்கத்துக் காரர்கள் உறுதி செய்தார்கள் இவ​ர்​களது காதலை !

இவற்றோடு., கடந்த சில நாட்களுக்கு முன்னர் ​நடந்த​ சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அமலா பாலை ரொம்ப புகழ்ந்து மிகைப்படுத்து கிலாகித்திருக்கிறார் விஜய்.

இப்போ மொத்தத்தில் பார்க்கின்றபோது, எதிர்வரும் ஜீன் 12 ஈ இந்த காதல் ஜோடி கல்யாண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியே வந்து விட்டது! பார்க்கலாம் திரையில் தோன்றிய இந்தக் காதலும் எப்படி அரங்கேறப்போகிறது என்று...!!​
1,780 Views
சுப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானுக்கு கிளம்பியிருக்கும் பெரும் எதிர்பார்ப்பு அலைகளுக்கு மத்தியில், ரஜினியின் அடுத்த படம் தொடர்பான தகவல்களும் கசிந்துள்ளன.
இதில் இயக்குனர் வேறு யாருமல்ல!
ரஜினியின் நெருக்கமான நண்பர் கே.எஸ்.ரவிக்குமார் தான் என்று கூடப்படும் நிலையில், அடுத்த படத்தில் சுப்பர் ஸ்டாருக்கு இரண்டு ஹீரோயின்கள் என்றும் அவர்கள் யாரென்றும் கோடம்பாக்கத்தார் காதுகளில் ஓதப்பட்ட ரகசியக் கதையை நாமும் ஓடிப் பிடித்துக் கொண்டோம்.

ஒருவர் ஆறடி அழகி நம்ம அனுஷ்காவும் , அடுத்தவர் ஹிந்தியில் கலக்கும் சோனாக்ஷி சின்ஹா என்றும் தெரிய வந்துள்ளது.



கோச்சடையானுக்காக ரஜினி தனிப்பட விருப்பப்பட்ட தீபிகா மாதிரி இவர்களும் ரஜினியின் ஸ்பெஷல் தெரிவுகள் தான் என்றும் கேள்வி.

ஆனாலும், இந்த விபரங்கள் பற்றி ரஜினி தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை.
1,288 Views
இலங்கையைச் சேர்ந்த தமிழ் ரப், ஹிப் ஹொப் கலைஞரான ஆர்யன் தினேஷ் கனகரட்னம், பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

தன்னுடைய பாடல் வரிகளைத் தன் அனுமதியில்லாமல் புதிய பாடல் ஒன்றில் G.V.P பயன்படுத்தியதாகவே தினேஷின் குற்றச்சாட்டு உள்ளது.

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் லவ்லி லேடீஸ் (Lovely Ladies) பாடலில் வரும் ரப் வரிகள், தன்னுடைய புதிய பாடலில் இருந்து பெறப்பட்டவை என்பதே தினேஷின் குற்றச்சாட்டு.

முன்னர் விஜய் அன்டனி போன்றோரின் படங்களில் பாடி, ரப் பாடல்கள் எழுதியுள்ள தினேஷ், இசைப்புயலின் கடல் திரைப்படத்தில் தினேஷ் பாடிய மகுடி மூலம் உலகம் முழுதும் பிரபலமாக்கியிருந்தது.

இந்தப் படத்தில் G.V.பிரகாஷ் குமாரினால் பாட அழைக்கப்பட்டதாகவும், எனினும் பாடல் வரிகளை மட்டும் எடுத்துவிட்டு தன் அனுமதியில்லாமல் அதைப் பயன்படுத்தியதாகவும் பொங்கியுள்ளார் ADK.

இப்போது குறித்த அந்தப் பாடலில் பாடல் வரிகள் என்று நா.முத்துக்குமாரின் பெயரும், பாடியவர்களில் ஒருவராக தினேஷின் பெயரும் இருக்கின்றன.
ஆனால் வரிகள் சிலது தனதே தவிர, பாடிய குரல்களில் எதுவும் தன்னுடையது அல்ல என்கிறார் தினேஷ்.

இதுபற்றி GVP இடம் கேட்டால் நேரடியாகப் பதில் கூற மறுக்கிறார் என்கிறார் தினேஷ்.

அடக்கமும், அமைதியும் , சிறிதும் பெருமையில்லாத பெருந்தன்மை உடைய இசைப்புயல் A.R.ரஹ்மான் குடும்பத்தில் இப்படி ஒருவரா என்று பொருமுகிறார் கோபத்தில் தினேஷ் கனகரட்னம்.

மௌனம் கலைப்பாரா GVP?
1,244 Views
IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...
ஸ்ரீனிவாசன் பதவி அகற்றப்பட்டார்..
இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேலும், சுனில் கவாஸ்கர் இந்தியக் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராகவும், (IPL காலத்தில் இவரது கடமைகள் இருக்கும்)
இந்தியக் கிரிக்கெட் சபையின் 5 உப தலைவர்களில் ஒருவரான ஷிவ்லால் யாதவ் தலைவருக்கான கடமைகளைப் பார்த்துக்கொள்வார் எனவும் அறிவித்துள்ளது.

எனினும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இம்முறை IPL இல் விளையாடுவதைத் தடைசெய்யப் போவதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பதவியேற்க எண்ணியிருந்த ஸ்ரீனிவாசனின் எண்ணம் தடைப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்தின் கைதோடு ஆரம்பித்த பந்தய, சூதாட்ட விவகாரம், ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனின் கைது, இதர சர்ச்சைகள் என்று நீடித்துக்கொண்டே செல்கிறது.

எனினும், இவ்வருடத்தின் IPL ஏற்கெனவே அறிவித்தது போல ஏப்ரல் 16ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ஆரம்பமாகும்.

1,359 Views



இந்திய கிரிக்கெட்டில் தொடரும் சிக்கல் நிலை, மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் இந்திய உயர் நீதிமன்றம்.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைவராக முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

இது பற்றி நேற்றைய தினம் முதலில் வெளியான செய்தியை இங்கே வாசியுங்கள்.

இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை பொறுப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன். அத்தோடு எந்த சவாலாயினும் அதனை எதிர் கொண்டு உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சுயாதீன விசாரணைகள் இடம்பெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்ற கருத்தை கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

இப்படி இவர் கருத்துக்களை வெளியிட்டாலும் பல கோணங்களில் பலரால் இந்த உயரிய பதவி குறிவைக்கப்படுகின்றது.

வங்காள விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் மடான் மித்த்ராவின் கருத்துக்களை பொறுத்தவரை அந்த பதவியில் ஆளுமை பொருந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி நியமிக்கபடுவதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் என்னையும் மறந்து விடாதீர்கள் என்ற போர்வையில் எக்குத் தப்பான கருத்துக்களை அடிக்கடி அள்ளி வீசிவரும் சர்சைக்குரிய பிஷன் சிங் பேடியின் கருத்துப்படி அந்த பதவியில் முன்னாள் BCCI தலைவர் சசாங் மனோகர் நியமிக்கபடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே,ஸ்ரீகாந்த்,டிராவிட் ஆகிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.



இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் IPL ஆரம்ப விழா ,அறிமுக விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டுபாயில் ஒழுங்கு செய்யபட்டிருந்து பிற்போடப்பட்டு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிந்தி கிடைத்த BCCI யின் தகவல்படி இப்படியாக கவாஸ்கரின் வரவை இந்திய கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் பேசப்படுகின்றது.இவருக்கு பதிலாக முன்னாள் ஹைதராபாத் சுழல்பந்துவீசாளர் சிவ்லால் யாதவ் அல்லது அனில் கும்ப்ளே ஆகியோரின் வரவையே BCCI யின் உயர் மட்டத்தினர் விரும்புவதாகவும் அறியக்கிடைக்கிறது.

இந்த சிவ்லால் யாதவ் BCCI யின் பிரதி தலைவராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை BCCI யின் யாப்பு பிரகாரம் சபையின் தலைவர் மரணித்தாலோ அல்லது அவரால் செயற்பட முடியாது போனால் அடுத்த 15 நாட்களுக்குள் அடுத்த தலைவர் தேர்வாகும் வரை அந்த தலைமை பொறுப்பை செயலாளரே கவனிக்க வேண்டும் என்ற விதி முறை இருக்கின்றமையும் சுனில் கவாஸ்கர் பதில் தலைவராவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனலாம்.



இந்த நிலையில் அடுத்து வரப்போகும் நாட்களில் இந்திய கிரிக்கெட் சபையில் திடுக்கிடும் மாற்றங்களும் ,மாறுதல்களும் வரலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
1,346 Views
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் , ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 
அத்துடன் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் இவருக்கு பதிலாக முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளனர்.



இன்று காலை விசாரணைகளுக்கு வழிவிட தான் பதவி விலகத் தயார் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டதாக இந்திய கிரிக்கெட் சபை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.

இப்போது பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிபதிகள், நாளை அதிகாரபூர்வ உத்தரவைப் பிரப்பிக்கவுள்ளனர்.

ஊழல் விசாரணைகளை செல்வதற்காகவே இந்தப் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியுட்டுள்ளார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்களில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன், அவரது மருமகனும் சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான குருநாத் மெய்யப்பன், சென்னை மற்றும் இந்திய அணிகளின் தலைவரான மகேந்திரசிங் தோனி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா இன்னும் பலரின் பெயர்கள் அடிபடுகின்றமை முக்கியமானது.



இன்றைய பரிந்துரைகளும் நாளைய தீர்ப்பும் இவர்களில் எல்லோருக்கும் அல்லது பெரும்பாலோனோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
2,573 Views
வெள்ளித் திரைகளில் அள்ளிப்பூசிக்கொண்டு அழகு காட்டும் எங்கள் நடிகைகளின் அரிதாரம் கலைத்த உண்மை முகங்கள் இவை.

















மேக் அப் செய்யும் மஜிக் பார்த்தீங்களா?

மேக் அப் பூசி மினுக்கும் வித வித நடிகைகளின் படங்களை இங்கே பாருங்கள்.
2,289 Views
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சிறிது காலம் காணாமல் போயிருந்த ஸ்ரீதேவியை , மீண்டும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்க​ ​அழைத்து வந்தவர் பாரதிராஜா.

கமலுக்கு ஜோடியாக அவரது 16 வயதினிலே படத்தில் நடிக்க வைத்து ஸ்ரீதேவிக்கு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார் ​பாரதி​ராஜா. படமும் செம ஹிட் ஆகி ஸ்ரீதேவியை முதன்மை நாயகியாக்கியது.

தென்னிந்திய சினிமாவில் மும்முரமாக எல்லா நடிகர்களோடும் போட்டி போட்டு நடித்து புகழின் உச்சியில் வ​ல​ம் வந்தவர், ஹிந்தி திரையிலும் தன்னை அடையாளப்படுத்த நுழைந்தார். அங்கும் எல்லோருக்கும் கனவு தேவதையாகவே ​வ​ல​ம் வந்தார். பின்னர், தன்னை ஹிந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கும் தாயாகி நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

பின்னர், மீண்டும் மறுபிரவேசம் செய்தார் சவாலான வேடமொன்றில் நடித்ததன் மூலம். இங்கிலீஷ் விங்க்ளிஷ் அவரது பெயரை மறுபடியும் எல்லோர் மனங்களிலும் பதித்தது.
இதன் பிறகு, ஸ்ரீதேவி எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்புக்கள் கைக்கு எட்டவில்லை. ஆனாலும், அண்மையில் , ஜி.வீ.பிரகாஷ் குமார் நடிக்கும் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவ​ர்​ யாரென்றால், அவர்தான் இயக்குனர் பாரதிராஜா. அறிமுகம் செய்து வைத்த பாரதிராஜாவும் ஸ்ரீதேவியும் இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரங்களான பெற்றோர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்பது நமது இரசிக்க பெருமக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனாலும், பாரதிராஜா எல்லோரையும் காய்ச்சி எடுப்பது போல இந்தப் படத்தை வறுத்தெடுக்காமல் விட்டால் சரி!​
1,733 Views
முத்தமிட்ட மாலுமி - Kissing Sailorஎன்ற பெயரில் பிரபலமானவர் அமெரிக்காவின் க்லென் மக்டபி (Glenn McDuffie).

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானை வெற்றி கொண்டதை அறிந்து ஆனந்தத்தில் அல்லோலகல்லோலப்பட்டு அருகே சிவனே என்று நின்று இருந்த ஒரு பெண்மணியை இழுத்து அணைத்து உதட்டில் உம்மா கொடுத்த கப்பலோட்டி மக்டபீ தனது 86 வயதில் மரணமாகி இருக்கிறார்.

ஒரு முத்தம் இவருக்கு உச்சபட்ச புகழைக் கொடுத்தது.



இவர் அடைந்த பிறவிப் பயன் என்ன தெரியுமா??

இவர் அந்த கிளுகிளுப்பான வீர செயலை புரிந்ததை அதே இடத்தில் இருந்த புகைப்பட கலைஞர் தன்னுடைய தன்னுடைய புகைப்பட கருவியில் போட்டோவாக பிடித்து பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்.

பின்னாளில் இவர்தானா அந்த போட்டோவில் இருக்கும் நபர் என்பதை அறிந்து கொள்வதற்காக இவரை அழைத்து அதே இடத்தில் அதாவது சம்பவ இடத்தில் மீண்டும் ஒரு முறை நிறுத்தி அதே போன்று உம்மா கொடுக்க சொல்லி (முதியவரான பின்னரும் கூட) 100 முறை போட்டோவை எடுத்து பார்த்திருக்கிறார்கள்.





கிழவரான பின்னரும் தன முத்தமிட்ட மாலுமி நாட்களை குஷியாக ஞாபகப்படுத்தி கலக்கியிருந்தார் மக்டபி.
1,507 Views
இந்த மானிட பிறவியில் மனிதனாக படைக்கப் பட்ட ஒவ்வொருவரும் மாட்டை அடக்கி பாத்திருப்பீர்கள் காளையை அடக்கி பாத்திருப்பீர்கள் அவ்வளவு ஏன் வியஜகாந்துடைய படங்களில் மதங் கொண்ட யானையை கூட அடக்கி பாத்திருக்கோம்.

ஆனால் நாங்க இப்ப பாக்க போறது வெறும் 22 வயதான தாய்லாந்து கட்டிளம் காளை ஒருவர் தன்னுடைய பார்வையிலேயே (பாவையை மயக்கி இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்.. ஆசையை பாருங்க.. ) நானும் அப்படிதான் நினைத்தேன்.

ஆனால் இந்த நபர் பாம்பை - அதுவும் கடும் விஷம் கொண்ட ராஜ நாகத்தை  அடக்கி கஞ்சத்தனம் இன்றி ஆசை முத்தங்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்.


முதல் கட்டத்தில் குறிப்பிட்ட நபரை அந்த பாம்பு நெருங்கவே விடவில்லையாம் என்றாலும் நிமிடங்கள் கழிய கழிய குறித்த தாய்வான் நபரின் கட்டுபாட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாம்.



பாருங்களேன் பாம்பைக்கூட விட்டுவைக்கவில்லையே..... பாசம் பாசம்..
1,943 Views
கழுத்தளவு சேற்று நீரில் தினந்தோறும் நீந்திச் சென்று தன மாணவர்களின் கல்விப்பசி போக்கும் ஆசிரியர் இந்தக் காலத்திலும் இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்துக்குரியது மட்டுமில்லை, போற்றக்கூடியதுமாகும்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தின் சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 40 வயதான ஆசிரியர் அப்துல் மாலிக் ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிக்கு தன் கிராமத்தின் ஆற்றங்கரையின் ஒரு புறத்தில் நின்று ஆடைகளை மாற்றி, அவற்றை நனையாத மாதிரி பத்திரப்படுத்திக்கொண்டு கழுத்தளவு நீந்தி மறுகரை அடைகிறார்.

மீண்டும் நல்ல ஆடைகளுக்குள் தன்னை உட்புகுத்தி காட்டு வழியாக மலையேறி 20 வருடங்களாகக் கற்பிக்கும் பாடசாலையைச் சேர்கிறார்.



இவ்வளவும் எதற்காக?

"பஸ்ஸில் ஏறினால் 12 கிலோ மீட்டர் தூரம், 3 மணி நேரம் எடுக்கும். இப்படியே நீந்தி, பின் நடந்து போனால் 25 நிமிடங்கள். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஏதாவது பயனுள்ளதா சொல்லிக் கொடுக்கலாம்" என்கிற மாலிக்குக்கு 20 வருட அனுபவம் அலுக்கவில்லையாம்.

வெறும் 25000 ரூபாய் சம்பளத்துக்காக அல்ல இது; அதையும் தாண்டிய ஆத்ம திருப்தி என்கிற அப்துல் மாலிக்கின் மாணவர்கள் இவரது பெயரைச் சொன்னாலே உருகிப் போகிறார்கள்.

அதில் ஒரு பத்து வயது மாணவன் தன் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டபோது "மாலிக் சேர் போல ஆசிரியராக வரவேண்டும்" என்கிறான்.
1,606 Views
ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக தனுஸ் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி எங்க இப்போ என்று கேட்கும் அளவுக்கு ஆளே தமிழ் சினிமாவில் இல்லை.

என்ன டாப்சி இப்பிடி ஆகிட்டீங்கன்னு கேட்டால், பொண்ணு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. ''இங்க நடிக்குறதுக்கு ஏற்றவங்களை யாரும் தேடுறதில்லை. எல்லோருமே கவர்ச்சிக்கே முதல்ல நடிகைகளை பயன்படுத்துறாங்க. நான் அந்த மாதிரி நடிக்கிறதுக்கு விரும்பவில்லை. எனக்கு தகுந்த பாத்திரங்கள் அமையும் போது மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். இல்லைன்னா... வேற தொழிலை பார்த்துட்டு போய்ட்டே இருப்பேன்'' என்று டாப்ஷி எகிறி விட்டார்.

ஆனாலும், இப்பொழுது இன்னுமொரு தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழில் தனக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்காமையால், தனது மனேஜரிடம் இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறார். என்ன தெரியுமா?
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் எல்லை இல்லாமல் நடிக்கவும் ஆடைக்குறைப்பை எந்தளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்கவும் தயாராக தான் இருக்கும் செய்தியை தெளித்திருக்கிறார்.

அப்போ நீங்க யோசிக்கலாம், முதல்ல ஏதோ சொன்ன போல இருக்கேன்னு ! அது அப்பிடித்தான்...! ஒருத்தருக்கு ஒரு மாதிரி பேசுவம்ல...
6,064 Views
கமல், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட தமிழ் சினிமாவின் அனேக முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.
ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ‘தல’ அஜித்துக்கும் இதுவரை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இது பற்றி நண்பர் வட்டாரத்தில் வருத்தப்பட்டும் இருந்தார் ஹரிஸ்.

தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஹரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படம் முடிவடைந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள். முதலில் இந்தக் கதையை ரஜினிக்குதான் சொன்னாராம் கே.வி.ஆனந்த். ஆனால், இந்தக் கதைக்கு பொருத்தமானவர் அஜித்தான் என ரஜினியே சொல்லி கே.வி.ஆனந்தை ‘தல’யிடம் அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
(இங்கே இதே பக்கத்தில்இது பற்றி நாம் முன்பு சொல்லியும் இருந்தோம்)

எது எப்படியோ ஹரிஸின் நீண்டநாள் ஆசை தற்போது இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நிறைவேறப் போகிறது
1,720 Views
[1]      «      1777   |   1778   |   1779      »      [1781]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top