நேற்று முதல் தனியார் துறையினரின் சம்பளம் 1500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக வரவு-செலவுத் திட்டத்தினூடாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை தனியார் துறையினரின் சம்பளம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2005ஆம் ஆண்டில் 36ஆம் இலக்க வரவு-செலவுத் திட்ட நிவாரண வழங்கல் சட்டத்தை ஒத்த சட்டமொன்றை கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியது.
இது தொடர்பில் தொழில் அமைச்சர் எஸ். பி. நாவின்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதன்படி தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும், நேற்று முதல் அமுலாகும் வகையில் தனியார் ஊழியர்களுக்கு முதலாவது கட்டமாக 1500 ரூபா சம்பள உயர்வு வழங்கவும் இதனூடாக நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த 2500 ரூபா சம்பள உயர்வானது தனியார்துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளது.