எஞ்சியுள்ள வன வளங்களை பாதுகாப்பதற்கு உச்சகட்ட நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில், இலங்கை சட்டகல்லூரியின் மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
வில்பத்து வனாந்தரத்தில் இடம்பெற்று வரும் வன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வில்பத்து வடக்கு எல்லை மற்றும் மன்னார் பெரியமடு பிரதேசங்களில் இடம்பெறும் நாசவேலைகள் தொடர்பான அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது